திங்கள், 1 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் - 8

தொல்தமிழர் அறிவியல் - 8
பகுப்பு முறை
நிலப் பகுப்பு
அகத்திணை ஏழு….
அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய
படுதிரை வையம் பாத்திய பண்பே –  2
பாலை என்றொரு நிலமின்மையின்முல்லை, குறிஞ்சி, மருதம். நெய்தல் ஆகிய அவை ஒலிக்கும் கடல் சூழ்ந்த இந்நிலப் பரப்பு நால்வகையாகப் பகுக்கப்பட்ட இயல்புடையனவாம்.
ஆண்டுப் பகுப்புபருவங்கள் / விசும்பு இடம் மாறுதல்
-பெரும்பொழுதுகார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவங்கள் .
நாள் பகுப்புபொழுதுகள் / காலம் இடம் மாறுதல்
 -  சிறுபொழுது –  காலை, நண்பகல், எற்பாடுமாலை, இடையாமம், விடியல். பகல் – 30 நாழிகை + இரவு – 30 நாழிகை. 60 நாழிகை = ஒருநாள். 24 மணி நேரம்.
காலப் பகுப்பு
இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்.  --194
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற கூறுபாடுடையதாகக் கூறப்படும் பகுதிக்கண், ஆராய்ந்து உணருமாறு பொருள் நிகழ்ச்சியைக் கூறுவதே காலம் ஆகும். தமிழ் இலக்கண விதிப்படிபெயர் , வினை என்னும்  சொல்வகை இரண்டனுள் வினை ஒன்றே காலம் காட்டி நிற்கும். ஒரு வினைச்சொல் முதல் நிலையால் தொழிலையும் இறுதி நிலையால் அத்தொழிலைச் செய்தாரையும் இடை நிலையால் காலத்தையும் காட்டும்.
இந்நூற்பா உரைக்கும் பொருள் நிகழ்ச்சியைக் கூறுவதே காலம் ஆகும் என்ற கருத்தைச் சார்பியல் கோட்பாட்டினைக் கொண்டு சிறிது நோக்குவோம். ..

 “ ……. விசும்புக்கு நேர்ந்த கதியே , இவ்வாறு காலத்துக்கும் நேர்கிறது. ‘மாறாத ஒரே இடம்என்கிற தொடர் எப்படியோ அதேபோல்மாறாத ஒரே நேரம்என்கிற தொடரும் அர்த்தமற்றதாய் இருப்பது தெரியவருகிறது.
    இரு நிகழ்ச்சிகளுக்கு இடையிலான நேர இடைவெளி, அவற்றுக்கு இடையிலான தொலைவுதொலைவு எப்படியோ அதேபோல, எதைச் சார்ந்து அது நிணயிக்கப்பட்டிருக்கிறதோ அந்தத் தொகுப்பைப் பற்றிய குறிப்பும் சேர்க்கப்பட்டு நிறைவுடையதாக்கப்பட வேண்டியிருக்கிறது.”  வினைச் சொல்லின் இலக்கணம் அதாவது மாறாத ஒரே நேரம்  என்ற ஒன்றில்லை என்னும் முக்கால உண்மை , இவ்வறியல் கோட்பாட்டோடு ஒத்திருப்பதைக் காணமுடிகிறதல்லவா..! -------தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக