வெள்ளி, 3 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -104


தன்னேரிலாத தமிழ் -104

சாதல் பொருள் கொடுத்தல் இன்சொல் புணர்வு உவத்தல்
நோதல் பிரிவில் கவறலே ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணமாக.”ஏலாதி.

நண்பர்கள் இறந்தவிடத்துத் தாமும் பிரிவாற்றாது இறத்தலும் ; வறுமையுற்றபோது பொருள் கொடுத்து  உதவி செய்தலும்; இன்சொல் கூறுதலும்; கூடியிருத்தலை விரும்புதலும்; வருந்தும்போது வருந்துதலும்; பிரியும் காலத்தில் உள்ளம் கலங்குதலும் ஆகிய ஆறு இயல்புகளும் உண்மையான நண்பர்களுக்கு இருப்பனவாகச் சான்றோர் கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக