வியாழன், 9 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -110


தன்னேரிலாத தமிழ் -110

நட்புஇடைக் குய்யம் வைத்து எய்யா வினைசூழ்ந்து                           
வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் திட்பமாம்
நாள் உலந்தது அன்றே நடுவன் நடுவு இன்மை
வாளா கிடப்பான் மறந்து.” ---நீதிநெறிவிளக்கம்.

நண்பரிடமே வஞ்சகச் செயலை மேற்கொண்டு, அவர் அறியாமலேயே அவருக்கு இடையூறு செய்யத்தக்க காலம் நோக்கியிருந்து, நண்பரின் பகைவர் பக்கமாய்ச் சார்ந்து நிற்பவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள், நட்பு கொன்ற  அன்றே முடிந்ததாகக் கொள்ள வேண்டும் ; இருந்தாலும் எமன் வஞ்சகனின் நேர்மையற்ற செயலைப் பொருட்படுத்தாது, அவனுடைய வாழ்நாள் முடியாததினால், அவன் உயிரைக் குடிக்காமல் வறிதே காலத்தைக் கழிப்பான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக