வியாழன், 16 ஜூலை, 2020


தன்னேரிலாத தமிழ் -112

பெருகுவது போல் தோன்றி வைத் தீப்போல்
ஒருபொழுதும் செல்லாதே நந்தும் --- அருகெல்லாம்
சந்தன நீள் சோலைச் சாரல் மலை நாட
பந்தம் இலாளர் தொடர்பு.நாலடியார்.

பக்கங்களிலெல்லாம் சந்தன மரங்களுடைய பெரிய தோப்புகளோடு கூடிய சாரல் மலைகள் உடைய நாட்டிற்கு அரசனே..! மனத்தால் ஒன்றாதவருடைய நட்பு வைக்கோல் போரில் பற்றிய நெருப்பைப்போல வளர்வது போலத் தோன்றி ஒரு பயனுமின்றிக் கெடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக