வெள்ளி, 24 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -113


தன்னேரிலாத தமிழ் -113

உணர உணரும் உணர்வுடையாரைப்
புணரப்புணருமாம் இன்பம்புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலாதாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.”நாலடியார்.

நம்மை அறிந்துகொள்ள அறிந்திருக்கின்ற அறிவு உள்ளவர்களை நட்புக்கொண்டால் இன்பம் உண்டாகும் ; அறிந்துகொள்ளும் அறிவற்றவர்களை நட்பாகக்கொண்டால் அவரைவிட்டு நீங்கின் துன்பம் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக