புதன், 23 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-23.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-23.

முனைவர் இரெ. குமரன்

 

 

                           களப்பாள் ஒன்றா இரண்டா..? ஏழு களப்பாள்கள், கூற்றங்களாகக் கொண்டு ஆண்ட  கூற்றுவன் (நாயனார்), மூவேந்தரை வென்றவன் இவ்வூரினன் என்பர்.

 ஏழு களப்பாளைச் சுற்றி வடக்கே அக்கரைக் கோட்டம், பன்னியூர்,கரம்பக்குடி, பனையூர், கோட்டூர்; மேற்கே வங்கத்தான்குடி, வேதபுரம், மானங்காத்தான் கோட்டம், பெருக வாழ்ந்தான்; தெற்கே குலமாணிக்கம், எடையூர், முத்துப்பேட்டை; கிழக்கே மீனவநல்லூர், எழிலூர், ஆட்டூர், மடப்புரம், திருத்துறைப்பூண்டி. (ஊர்ப் பெயர்கள் ஆய்வுக்குரியன).

 

                       பாமணி ஆற்றின் கிழக்கே பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பழம்பெரும் பூமி, வெண்ணாற்றின் கிளை ஆறுகளால் வளங்கொழிக்கும்  நெல் வயல்களைக் கொண்டது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப்பசேல் எனப் பச்சைப் பட்டு போர்த்திருக்கும். வயலில் நீர் பாய்ச்ச,  காலால் மடையை மிதித்தால் காவிரி வெள்ளம் பாயும்.

                         களப்பாள் எனும் இவ்வூர் களர்பாழ் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. ஊர், நத்தம், களர்பாழ் ஆறிடுபடுகை முதலியவை நிலப்பெயர்கள்.(சோழர் காலக் கல்வெட்டுகள். ) உண்மையில் இன்றுங்கூட களப்பாள் மண் உப்பு மண்ணே. களர்  எனும் சொல்  உவர், போர்க்களம் என்று இரு பொருள்படும்..

 

                  இன்று நாம் காண்பதுபோல், இவ்வூர்  பண்டைய காலத்தில் நெல் வயல்கள் நிறைந்த வளங்கொழிக்கும்  நிலமாக இருந்திருக்க வாய்ப்பில்லை; இது களர் நிலமாகையால் கூற்றுவனார் காலத்தில் அரண்மனைகளோடு  பரந்து விரிந்து கிடந்த நிலப்பரப்பாக இருந்திருக்கக் கூடும். இவ்வூரில் கிடைக்கும் எச்சங்களைக் கொண்டு ஆராய வேண்டியுள்ளது.

…………………………………………தொடரும்……………………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக