சனி, 5 ஆகஸ்ட், 2023

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் -5.

முனைவர் இரெ. குமரன்

 

 

களப்பிர அரசர்கள்

 

கல்லாடம். கி.பி. 10 ஆம் நூற்றாண்டு

 

படை நான்குடன் பஞ்சவற் றுரந்து

மதுரை வவ்விய கருநட வேந்தன்

அருகர்ச் சார்ந்து நின்று அரன்பணி அடைப்ப.” –

 

                            நான்கு வகைப் படைகளுடன் வந்து பஞ்சவராகிய பாண்டியரை அகற்றிவிட்டு, மதுரையைப் பிடித்த கருநாடக வேந்தன் அருக மதத்தைச் சார்ந்திருந்த காரணத்தால் அரனாகிய சிவன் கோயில் வழிபாட்டை மறுத்துவிட்டனர் என்று , கல்லாடச் செய்யுள் கூறுகிறது.

 

மூர்த்தி நாயனார் புராணம்.

 

கானக் கடிசூழ் வடுகக் கருநாடர் காவல்

மானப்படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்

யானை குதிரைக் கருவிப் படை வீரர் திண்தேர்

சேனைக் கடலுங்கொடு தென்திசை நோக்கி வந்தான்-(11)

 

வந்துள்ள பெரும் படை மண் புதையப் பரப்பிச்

சந்தப் பொதியில் தமிழ்நாடுடை மன்னன் வீரம்

சிந்தச் செருவென்று தன்ஆணை செலுத்துமாற்றால்

பந்தப் பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான்.”-(12)

 

வடுகக் கருநாடர் நாட்டிலிருந்து நால்வகப் படையுடன் வந்து தமிழ் நிலத்தைக் கைப்பற்றினான், என்று   கல்லாடம் விரித்துரைக்கின்றது

 

                               கல்லாடனார்,புறநானூறு 385 ஆம் பாடலில் மூவேந்தரையும் பாடியுள்ளார். இவர் திருவேங்கட நாட்டுக்குரியவராதலின், சோழநாட்டுப் புரவலரை (அம்பர்கிழான் அருவந்தை) வாழ்த்தும் பொழுது காவிரி மணலினும் பலவென்னாது வேங்கடமலையிற் பெய்த மழைத்துளியினும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தியுள்ளார்.

 

                           இதுவரை மன்னர்களுக்கு உதவிய சீறூர்த் தலைவர்கள், சிற்றரசர்கள் போன்றோர் சமண, பெளத்த மதக் கருத்துகளிலிம் தமிழருக்கே உரிய திணைப் பாகுபாட்டுத் தெய்வங்களை வணங்கும் தன்மையிலும் வணிகத்திலும் பொருளீட்டும் தமிழர்களின் செல்வத்தை, உழைப்பில் ஈடுபடாது தங்கள் உடைமையாக்கிக்கொண்டு மூட நம்பிக்கைகளை சமூகத்தில் விதைக்கும் அந்தண வைதீகர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் மூவேந்தர்க்கும் அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். …………………தொடரும்…………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக