வியாழன், 24 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-24..

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-24..

முனைவர் இரெ. குமரன்

 

காலச் சுழலில் களப்பாள்

                                   நெல்லைத்தவிர வேறு விளைபொருள் இல்லை ; விவசாயம் தவிர வேறு தொழிலும் இல்லை. ஆடி முதல் தைவரை சேற்றோடுதான் போராட்டம். மாசியும் பங்குனியும் மத்தளக் கொட்டு; சித்திரை பொறந்தோன குப்புறக் கொட்டு என்பதே நிலத்தின் பழமொழி. சேற்றோடு போராடியவன் சோற்றோடு போராடும காலம். இயலாமை எங்குமே இல்லை; இல்லாமை எங்கும் இருந்தது. இந்நிலை ஏன்…..எப்படி வந்தது….?

                         விளைநிலங்கள் அனைத்தும் பண்ணைகளுக்கே சொந்தம்; பண்ணை ஆட்களும் அடிமைகளாகப் பண்ணைக்குச் சொந்தம். ஆண்டான் அடிமைச் சமுதாயம் மலையும் மடுவுமாக தோற்றம் பெற்றது. பண்ணை முதலாளிகள் முதலியார்,ஐயர், மடாதிபதிகள். பண்ணை வீடுகள் சார்ந்த தொழிலாளிகள் பரிகாரி, பூசாரி, குருக்கள்,குடியானவர்கள். குடியானவர்கள் பண்ணை முதலாளியை ஐயா என்றும் அவர்தம் மனைவியை அண்ணி என்றும்  அவர்தம் குழந்தைகளைத் தம்பி என்றும் அழைப்பர். தாழ்த்தப்பட்டவர்கள், குடியானவரை ஐயா என்றும் அவர்தம் மனைவியை ஆச்சி என்றும் அவர்தம் குழந்தைகளை  ஐயா என்றும் அழைப்பர். பண்ணையார்க்குக் குடியானவர்கள் தீண்டத்தக்கதவர்கள்;  பண்ணையார்க்கும் குடியானவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள்.

 

                     இத்தகைய பண்ணை ஆட்சிமுறையில் முதல் நிலை-பண்ணையார்கள்; இடைநிலை -குடியானவர்கள் ; கடைநிலைதாழ்தப்பட்டவர்கள்.

 இவ்வகையான ஏற்றத்தாழ்வுகள் ஊரில் ஓர் இறுக்கமான சூழ்நிலையைத் தோற்றுவித்தன.

………………………………………………தொடரும்……………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக