செவ்வாய், 14 நவம்பர், 2023

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…10.

” சோம்பத் திரியேல் ”-ஒளவையார், ஆத்திசூடி

சோம்பேறியாகிக் கண்டபடி ஊர் சுற்றித் திரியாதே.

 

முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது சோம்பித் திரிதலே. கல்வி பயிலும் காலத்தில் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து உன்னை நீயே கெடுத்துக்கொள்ளாதே.

 

“பற்பல நாளும் பழுதுஇன்றிப் பாங்குடைய

கற்றலின் காழ் இனியது இல்.” –பூதஞ்சேந்தனார், இனியவை நாற்பது;40.

ஒவ்வொரு நாளும் வீணே போக்காது, பயனுள்ள நூல்களைக் (பாடங்களை) கற்பதைப்போல் இனிமை உடைய செயல் வேறு எதுவும் இல்லை. என்ற சான்றோர் வாக்கினை மனத்தில் கொண்டு காலம், நேரம் பார்க்காமல் கல்வி கற்று முன்னேறுவாயாக.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக