வியாழன், 30 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…20.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…20.

ஒளவையார் அருளிய மூதுரை

 

கல்லாதவன் காட்டுமரமாவான்

 

“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் – சபை நடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன் நன் மரம்.”

 

காட்டில் வளர்ந்து நிற்கும் மரங்களைக் காட்டிலும் படிப்பறிவு இல்லாதவனும் ஒருவருடைய குறிப்பை அறியாதவனும் நல்ல மரங்களாவர். காரணம் மனித மரங்கள் பார்க்கும் ; நடக்கும் ;பேசும்.”

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

“கல்லாது முதிர்ந்தவன் கண் இலா நெஞ்சம் போல்

புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை”

நல்லந்துவனார்; கலித்தொகை,130.

 

கல்வி கற்காது முதுமை எய்தியவனின் அகக்ண் இல்லாத நெஞ்சம் போலத் தனித்து வருந்துவதற்குக் காரணமான மாலைக்காலம் , நிறைந்த இருளைப் பரவச் செய்தது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக