திங்கள், 13 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…9.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…9.

” நன்றி மறவேல் ”-ஒளவையார், ஆத்திசூடி

பிறர் உனக்குச் செய்த நன்மைகளை ஒருபோதும் மறக்காதே.

“ முன்ஒன்று தமக்குஆற்றி முயன்றவர் இறுதிக்கண்

பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர்….”பாலை பாடிய பெருங்கடுங்கோ; கலித்தொகை-34.

முன்பு ஒருவர் தனக்கு உதவி செய்தவர் வறுமையுற்ற பொழுது மறவாது அவர்க்கு அந்த உதவியைத் திருப்பிச் செய்யும் நல்லோர் பெருமை உடையவர் ஆவார்.

 

”கன்றாமை வேண்டும் கடிய பிறர் செய்த

நன்றியை நன்றாகக் கொளல் வேண்டும்.”

பிள்ளைகளே…! பிறர் செய்த தீமைகளை மறத்தல் வேண்டும் ; பிறர் செய்த நன்மைகளை பெரிதும் நினைத்தல் வேண்டும்.

 

முன்னோர் அறிவுரை அமிழ்தம், எனவே வாழ்வில் எந்நாளும் மறவாது நல்லொழுக்கக் கருத்துக்களைப் போற்றிப் பின்பற்றுங்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக