வியாழன், 16 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…12.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…12.

” நூல்பல கல் ”-ஒளவையார், ஆத்திசூடி

இளமை முதற்கொண்டே நல்ல நூல்கள் பலவற்றைக் கற்றுக்கொள்.

கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவாய் என்று சிலர் கூறுவர். ஆனால் திருவள்ளுவரோ கற்க கசடறக் கற்பவை என்று கற்றறிந்தாரிடம் கேட்டு கற்க வேண்டிய நூல்களைப் பிழையின்றிக் கற்றுக்கொள் என்கிறார். வள்ளுவர் சொல் கேள்.

“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

\கற்றனைத்து ஊறும் அறிவு,” –(396)

மணலில் தோடும் அளவே நீர் ஊறும், அதுபோல் மக்கள்  கற்ற அளவே அறிவும் ஆற்றல் பெறும். அவ்வறினைப் பெருக்கிக் கொள்ள……………..

படித்துப் பழகு , அக இருள் நீக்கும் அறிவு , கற்கும் கல்வியால்தான் விளைகிறது.

மாமேதை வி.இ.லெனின் கூறுவார்: ஒரு நாடு முன்னேறுவதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன..அவையாவன….

முதலாவது வழி- படி

இரண்டாவது வழி- படி

மூன்றாவது வழியும் – படி என்றார்.

பாவேந்தரும்  --இளமையி கல் -;எழுந்து நில் என்கிறார்.

”நிற்கையில் நிமிர்ந்து நில்

நடப்பதில் மகிழ்ச்சி கொள்

சற்றே தினந்தோறும் விளையாடு

பற்பல பாட்டும் பாடிடப் பழகு

பணிவாகப் பேசுதல் உனக்கழகு

கற்பதில் முதன்மை கொள்

காண்பதைத் தெரிந்து கொள்

எப்பொழுதும் மெய்யுரைக்க அஞ்சாதே”

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக