வியாழன், 23 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…15.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…15.

ஒளவையார் அருளிய மூதுரை.

மேன்மக்கள் இயல்பு

‘”அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்

நட்டாலும் நண்பல்லார் – நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.”

 

 பாலைத்தீயிலிட்டுக் காய்ச்சினாலும் சுவை குறையாது. சங்கினைச் சுட்டு நீறாக்கினாலும் தன் வெண்மை நிறத்தையே தரும். அவைபோல மேன் மக்கள் துன்பம் வந்தபோதும், தம் உயர் குணத்தினின்றும் மாறுபடார் ; கீழோர் கலந்து பழகினாலும் நண்பர் ஆகார்.”

 

”நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடையாளர் தொடர்பு,  -குறள்;783.

 

ஆன்றோர் அருளிய நூலின் நற்பொருளை கற்க,கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்று பழகப் பழக  நற்பண்பு உடையவரின் நட்பும் இன்பம் தரும்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக