வெள்ளி, 1 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…93.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…93.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே….!

“குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்

        கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்

கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்

        கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்

கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்

        கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.”

தன் குற்றம் மறைத்து பிறர் குற்றங்களைப் பலரிடத்தும் சென்று சொல்லாதே. 

கொலை, களவு இன்னபிற கொடும் குற்றச் செயல்கள் செய்பவரோடு சேர்ந்து 

இருக்காதே. கற்பொழுக்கம் பேணும் பெண்டிரைக் கண்டு காம வயப்படாதே. 

நாட்டை ஆளும் அரசனே அனைவர்க்கும் முதல்வர் ஆவார் என்பதைக் கருத்தில் 

கொண்டு அரசரோடு எதிர்வாதம் செய்யாதே. கோயில் இல்லா ஊரில் 

குடியிருக்காதே. ஈடுஇணையில்லாத ஆற்றல் உடைய வள்ளியின் கணவனாகிய 

முருகனை வணங்குவாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக