செவ்வாய், 5 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…97.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…97.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

“சேராத இடந்தனிலே சேர வேண்டாம்

        செய்ந்நன்றி ஒரு நாளும் மறக்க வேண்டாம்

ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்

        உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்

        பிணைபட்டுத் துணைபேசித் திரிய வேண்டாம்

வாராரும் குறவருடை வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.”

நெஞ்சே…..!

சேரத்தகாதவர்களோடு நட்புக் கொள்ள வேண்டாம்; சிற்றினம் சேராமை நன்று.

ஒருவர் செய்த உதவியை எந்நாளும் மறக்க வேண்டாம் ; செய்ந்நன்றி கொன்ற குற்றத்திற்கு ஆட்படாதே.

ஊராரைப் புரிந்து கொள்லாமல் ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் கோள் மூட்டி ஊராரைப் பகைத்துக் கொள்ளாதே.

 வாழ்க்கையில் நன்மை தீமைகளில் உடன் நிற்கும் பண்புடைய உற்றார், உறவினர்களை மதித்துப் போற்றாது இழிவாகப் பேச வேண்டாம்.

பெயர் விளங்கும்படியான செயல்களைச் செய்யத் தவற வேண்டாம்.

ஆழம் தெரியாமல் காலை விடுவது போன்று நல்லவர் என நினைத்துப் பொறுப்பேற்று மாட்டிக்கொண்டு அலைந்து அல்லல்பட வேண்டாம்.

 பெருமை பொருந்திய குறவர் குலமகள் வள்ளியின் கணவன் முருகனை வணங்கி வாழ்த்துவாயாக.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக