ஞாயிறு, 3 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…95.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…95.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

”வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்

        மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

        முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்

        வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்

சேர்த்த புகழாளனொரு வள்ளி பங்கன்

        திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே.”

நெஞ்சே…..!

வேலையற்ற வீணர்களின் பேச்சைக்கேட்டுத் திரிய வேண்டாம்.

உற்றார் உறவினர், எவராயினும் உன்னை மதிக்கவில்லை என்றால் அவர் வீட்டு வாசலை மிதிக்காதே.

அறிவிற் சிறந்த பெரியோர் கூறும் அறிவுரைகளை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

எதற்கெடுத்தாலும் கோபம் கொண்டு கடிந்து கொள்வாரோடு நட்புடன் பழக வேண்டாம்.

அறிவூட்டும் ஆசிரியரின் ஊதியத்தைக் காலம் தாழ்த்தாமல் கொடுத்துவிட  மறக்க வேண்டாம்.

வழிப்பறி செய்யும் கயவர்களோடு  நட்புக் கொள்ள வேண்டாம்.

சிறந்த புகழ் உடையவனும் ஒப்பற்ற வள்ளியின் கணவனுமாகிய முருகனின்  அருள்திறத்தை நாளும் சொல்லி மகிழ்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக