புதன், 9 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி – 21 - 22

பரிபாடல் – அரிய செய்தி – 21 - 22
வானூர்தி
அம்பி கரவா வழக்கிற்றே ……………..
நல்லந்துவனார். பரிபா. 11:  70 – 71
தேவர்கள் உறைதற்கு இடமான ஒளிமிக்க வானத்தின்கண் – வைமானிகர் ஊர்ந்து செல்கின்ற விமானத்தை – தெளிவாகக் காட்டுகின்ற தெளிந்த நீரோட்டத்தை உடையது வையை .
( வைமானிகர் – விமானம் உடையவர் – தேவரில் ஒரு வகுப்பினர்; ஊர்பு ஆடும் – ஊர்ந்து திரியும்; அம்பி – விமானம் – வானவூர்தி. )
பரிபாடல் – அரிய செய்தி - 22
அறவோர் – பார்ப்பனர்
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விநூல் அந்தணர் விழவு தொடங்க
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப
நல்லந்துவனார். பரிபா. 11:  77 – 79
மிகப் பெரிய திங்கள் மண்டிலம் தன்னகத்துள்ள களங்கத்தோடே வளர்ந்து நிறைந்த திருவாதிரை நாளின்கண் -  விரிந்த மெய்ந்நூல்களை உணர்ந்த அறவோர் – அத்திருவாதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்குத் ( சிவ பெருமான்) திருவிழாவைத் தொடங்க – முப்புரி நூலாகிய பூணூலை உடைய பார்ப்பனர் அவ்விழவின்கண்- இறைவனுக்குப் பலிப் பொருள் (பூசனைப் பொருள் ) பெய்த பொற்கலங்களையும் பிறவற்றையும் ஏந்தினர்.
( மாயிருந் திங்கள் – முழுமதி ; அந்தணர்  - பொதுப் பெயர் ; விரிநூல் அந்தணர் – அறவோர் ;  அறவோர் – ஆகமங்களை உணர்ந்த பூசகர் ; புரிநூல் அந்தணர் – பார்ப்பனர். ஒப்பு நோக்கு : அந்தணர் என்போர் அறவோர் … குறள் . 30)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக