ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 26

பரிபாடல் – அரிய செய்தி - 26
உலகத் தோற்றம்
 விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்
நானிலம் துளக்கு அறமுழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணிமணி மடற்பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி
மூஉரு ஆகிய தலை பிரி ஒருவனை
நல்லெழுதியார்.பரிபா. 13 : 32 - 37
பகைவருடைய மார்பை உழுகின்ற வளைந்த வாயினை உடைய கலப்பையைப் போர்க் கருவியாக ஏந்தியவன் பலராமன் – முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என நான்கு நிலத்தில் வாழும் உயிர்களின் நடுக்கம் தீருமாறு அந்நிலவுலகைக் கடலிலிருந்து வெளியா நெம்பிக் கொண்டுவர – ஆண்பன்றியாக உருக்கொண்டனன்.
 முன்னொரு காலத்திலில் இரணியாட்சகன் என்ற அரக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் ( ஊழிக் காலத்தே) கடலிற் கொண்டுபோகப் பெருமான் வராக (பன்றி) உருக்கொண்டு  - கொம்பால் குத்தி உலகை வெளிக்கொணர்ந்தார்.
( இப் புராணக் கதை உணர்த்தும் உண்மைய அறிதல் வேண்டும். பாய் போல் திரண்டு எழுந்த அலைகள் – கடல் கோளாக உலகை அழித்தது – பின்னர் உலகம் தோன்றியது எனலாம் – சரியான அளவுடைய நெம்பு கோல் கிடைக்குமானால் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுவேன் என்றார் ஆர்க்கிமிடிஸ் . )  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக