திங்கள், 21 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 35

பரிபாடல் – அரிய செய்தி - 35
பச்சிலை
 ………………………….பாங்கர்
பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்
நப்பண்ணனார். பரிபா. 19 : 74 – 75

….. அச்சுனையின்கண்ணும் பக்கத்தினும் பச்சிலையின் கொழுந்தும்… மகளிர் வாய்போல் மலர்ந்த அரக்காம்பலும்……
பசும்பிடி – பச்சிலை என்னும் பெயருடைய ஒரு கொடி.  குறிஞ்சிப்பாட்டில் வரும் “பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா” – இதற்குப் “ பச்சிலை” எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர். ஈண்டு மருக்கொழுந்துபோல இப்பசும்பிடி கொழுந்திலே சிறப்புடையது என்று கருதிப் போலும் பசும்பிடி இளமுகிழ் என்பதற்குப் பச்சிலையது இளைய கொழுந்து எனப் பொருள் கூறினார் பரிமேலழகர். இலையிலேயே மணமுடையது என்பது கருதிப்போலும் இதற்கும் பச்சிலை என்பது பெயராயிற்று; எல்லாவற்றிலும் பசுத்திருத்தலிற் பச்சிலை என்று பெயர் பெற்றது “ என்பார் நச்சினார்க்கினியர். இன்று பச்சிலை என்பது மூலிகையின் பொதுப் பெயராம்.
( மாலை புனையும் தொழில் வகைகள்  - நிணத்தல். தெற்றுதல். கோத்தல். கட்டுதல் என்பன.) 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக