சனி, 19 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 33

பரிபாடல் – அரிய செய்தி - 33
மதுரையில் பிறப்பின் …..
புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்
கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை
அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொண்மார்
சிறந்தோர் உலகம் படருநர் ……
நப்பண்ணனார் பரிபா. 19 : 8 – 11
 பெருமானே ! நின்னை வழிபடும் பொருட்டு அறிவாலும் மறத்தாலும் செய்யும் சொற்போர் – படைப் போர் என்னும் இருவகைப் போரிடத்தும் தோற்றலின்றி வெல்லும் இயல்புடைய – மதுரையின்கண் வாழும் மகளிரும் மைந்தரும் ஆகிய மக்கள் – புணர்ச்சி இன்பத்தோடே வந்து பொருந்திய – அவ்வின்ப இரவு நீங்கிய வைகறைப் பொழுதிலே  விழித் தெழுந்து – இவ்வுலகத்தே பெரிதும் அறத்தைச் செய்து – அவ்வறத்தின் பயனாகிய இன்பத்தை நுகரும் பொருட்டு வானவர் உலகத்திற்கு மகிழ்ந்து செல்வர். ( அறம் செய்தோர் துறக்கம் எய்தி அதன் பயனை நுகர்வர் என்பதும் – தீவினை செய்தோர் நரகம் எய்தி வருந்துவர் என்பதும் மெய்ந்நூற் துணிபு. ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக