வியாழன், 31 டிசம்பர், 2015

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி 1

பத்துப்பாட்டு – அரிய செய்தி
(நூல் வரலாறு – முன்பதிவுகளில் காண்க.)
திருமுருகாற்றுப்படை – இயற்றியவர் – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
உரையாசிரியர் – முனைவர் இரா. மோகன்.
 -திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி  1
1.  திருப்பரங்குன்றம்
முருகப் பெருமான்
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து
கரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிளைந்த சென்னியன்
நக்கீரர். திருமுரு. 1: 42 – 44
           முருகன் குறிஞ்சி நிலத் தெய்வம் ; ஆதலின் அவனது கண்ணியாகிய செங்காந்தளின் சிறப்புரைக்கப்பெற்றது .
            குரங்குகளும் முற்றிலும் ஏறிப் பயின்று அறியா மரங்கள் நெருங்கிச் செழித்துள்ள பக்க மலைச் சாரலில் உள்ள – வண்டுகளும் மொய்க்காத – சுடர்போலச் சிவந்த காந்தள் பூக்களால் தொடுத்துக் கட்டிய குளிர்ந்த பெரிய மாலையை அணிந்த திருமுடியை உடையவனாக விளங்குகிறான் முருகன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக