வெள்ளி, 1 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 2

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 2
பார்முதிர் பனிக்கடல்
பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்கு
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
நக்கீரர். திருமுரு. 1: 45 – 46
நிலம் முற்றுப்பெற்ற குளிர்ந்த கடலே கலங்கும்படி உள்ளே சென்று – சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற  - சுடர்விடுகின்ற இலைவடிவாகிய நெடுவேல். ( மண் தோன்றாக் காலத்திற்கு முன்  தோன்றியது கடல் ஆதலான் “ பார்முதிர் பனிக்கடல் “ என உலகத் தோற்றம் குறித்தார்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக