சனி, 9 ஜனவரி, 2016

4.திருஏரகம்

4.திருஏரகம்
அந்தணர் என்போர்…!
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமைநல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
            நக்கீரர். திருமுரு. 1: 177 – 182
ஓதல் முதலிய அறுவகைத் தொழில்களைச் செய்தலிலே வழுவாமல் – உலகத்தார் மதிக்கின்ற பல்வேறு பழங்குடிப் பிரப்பினராய் – நாற்பத்தெட்டு வருடங்கள் நல்ல இளமைக் காலம் முழுவதும் வேதம் கூறும்வழியில் பிரமசரியத்தைக் கைக்கொண்டு கழித்தவர்களும் -  அதன்பின் இல்லற வாழ்க்கையில் பயின்ற கோட்பாட்டினை உடையவர்களும் – மூன்று வித வடிவுடைய குண்டத்தில் மூன்று வகைத் தீயால் உண்டாகிய செல்வத்தையும்  - இரு பிறப்பினையும் உடைய அந்தணர்கள் தாங்கள் வழிபட வேண்டிய முக்காலமும் அறிந்து பூணூலையும் புலராத ஆடையையும் அணிந்து கொண்டு தலைமேல் குவித்த கையினராய் முருகப் பெருமானைப் புகழ்ந்து துதித்து – சரவணபவ என்னும் வேத மந்திரத்தை நாவால் பலமுறை ஒலித்து வழிபட…
திருவேரகம் – இதனை “மலை நாட்டகத்தொரு திருப்பதி “ என்றார் நச்சினார்க்கினியர். அருணகிரியார் சோழ நாட்டிலுள்ள “சுவாமிமலை” என்னும் தலமே  “ஏரகம் “ என்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக