சனி, 9 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 8
பாடும் மகளிர் – தோற்றப் பொலிவு
நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்நகைப்
பருமம் தாங்கிய பனிந்துஏந்து அல்குல்
மாசுஇல் மகளிரொடு மறுவின்றி விளங்க
நக்கீரர். திருமுரு. 1: 143 – 147
நோயில்லாது இயன்ற நல்ல உடம்பினை உடையவர் ; மாந்தளிரை ஒத்த நிறத்தை உடையவர் ; பொன்னுரை போன்று மிளிரும் தேமலை உடையவர் ; நல்ல ஒளிமிக்க மேகலையை அணிந்த அல்குலை உடையவர்  ஆகிய பாடினியர் இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே செல்ல ……
( பருமம் – மேகலை வகை ; அவிர்தல் – விளங்குதல் ; திதலை – தேமல்.)
முருகனின் தந்தை – சிவன்..?
முருகப் பெருமானை இடையறாமல் நினைக்கும் முனிவர்கள் முன்னே செல்ல – அவர்களைப்பின்பற்றிக் கந்தருவரும் அவர்தம் மகளிரும் இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே பின்னால்வர – அவர்களுக்குப் பின்னால் திருமால் சிவபெருமான் இந்திரன் ஆகிய தேவர்கள் தொடர்ந்து செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக