சனி, 23 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 2

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 2
இமயத்தில் வில் பொறித்த….
குடபுலம் காவலர் மருமான் ஒன்னார்
வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த
எழிஉறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 47 – 49
இயற்கை வளம் செறிந்த  மேற்றிசைக்கண் உள்ள சேர நாட்டின் அரசர் குடியில் பிறந்தவனும் கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோளையுடையவனும் குட்ட நாட்டிற்குத் தலைவனுமாகிய மன்னன்…
சேரர் ஆணை இமயம் வரை சென்றமையை –
( மருமான் – மரபில் தோன்றியவன் ; ஒன்னார் – பகைவர் ; வாங்குவில் – வளைந்த வில் – இலச்சினை ;  வருபுனல் – ஆற்று நீர்.)
வடதிசை எல்லை இமயமாகத்
தென்னங் குமரியோடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமந் ததைய ஆர்ப்பெழ
…………………………. குட்டுவ.  என்கிறது பதிற்றுப்பத்து.
குமரியொடு வட விமயத்து
ஒருமொழிவைத் துலகாண்ட
சேரலாதன் …….  என்கிறது சிலப்பதிகாரம்… தொடரும்……….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக