வியாழன், 28 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 7

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 7

ஆய்
………………………. நிழல்திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும் ……
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 95 – 99

                        ஒளிமிக்க நீல மணியினையும் நாகம் கொடுத்த கலிங்கத்தையும் விருப்பத்தோடு ஆலின் கீழிருந்த இறைவனுக்குக் கொடுத்தவனும் – வில்லேந்திய சந்தனம் பூசிப் புலர்ந்த தோளையுடையவனும் – ஆர்வமிக்க மொழிகளைப் பேசுபவனும் ஆகிய ஆய் என்னும் வள்ளலும்…. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக