திங்கள், 4 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1127


திருக்குறள் -சிறப்புரை :1127

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து. ---- ௧௧ ௨௭

 என் காதலர் என் கண்ணுள்ளேயே இருப்பதனால்,  கண்ணுக்கு மை தீட்டும்போது அச்சிறுபொழுதும் அவர் மறைந்துவிடக் கூடும் என்று அஞ்சி , கண்ணுக்கு மை தீட்டுவதுமில்லை.

ஊரீர்
எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன்
நினைப்பினும் கண்ணுள்ளே தோன்றும்…” ---கலித்தொகை

ஊரீரே…! என்னை இகழ்ந்தாலும் எம் கேள்வன் என்னை இகழ்ந்திலன் ; நெஞ்சால் நினைப்பிடத்துத் தோன்றுதலினும் கண்ணினுள்ளே தோன்றிக்கொண்டே இருக்கின்றான்.

1 கருத்து: