ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1145


திருக்குறள் -சிறப்புரை :1145

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது. --- ௧௧௪௫

கள் குடிப்பவர்களுக்குக் களிப்பு மேலிடும்போதெல்லாம் மேலும் குடித்தல் இனிதாவதைப்போல, எம்முடைய காமம் அலரால் வெளிப்படும் போதெல்லாம் இனிமையுடையதாகின்றது.

 மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை
அருங்கரை நின்ற உப்பெய் சகடம்
பெரு பெயல் தலைய வீந்தாங்கு இவள்
இரும்பல் கூந்தல் இயலணி கண்டே. “குறுந்தொகை.

 நெஞ்சே…! ஏறுதற்கரிய கரையில் நின்ற உப்பு வண்டியில் பெரிய மழை பொழிந்ததனால்  அழிந்ததைப்போல, இவளது கரிய கூந்தலின்  இயற்கை அழகைக்கண்டு, மறுக்கப்பட்டோமென்று அன்பு ஒழியாக் காமத்தால் நாண் அழிந்து, கள்ளுண்டு களித்ததன்மேலும்  கள்ளை விரும்பி உண்டாற்போல,  நீ அவளை ஒருமுறை விரும்பியதன்  பின்னும் விருப்பத்தை அடைந்தாய். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக