புதன், 27 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1148


திருக்குறள் -சிறப்புரை :1148

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். ------ ௧௧௪ ௮

ஊரார் தூற்றும் அலரால் காமத்தை அடக்கிவிடாலாம் என்று எண்ணுவது ; எரிகின்ற தீயை நெய் விட்டு அணைப்பதைப் போன்றது.

அம்ம வாழி தோழி காதலர்
உள்ளார்கொல் மருள் உற்றனம் கொல்
விட்டுச் சென்றனர் நம்மே
தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே.” ---ஐங்குறுநூறு.

தோழி...வாழி..! என் சொல்லைக்கேள், மூங்கில் புதரில் பற்றிய தீயைப் போல, ஊரில் அலர் எழும் வண்ணம் நம்மைவிட்டுப் பிரிந்துசென்ற நம் காதலர் நம்மை நினையாரே..? அன்றி, நாம் தாம் அவர் குறித்துச்சென்ற பருவம் வாராததாகவும் வந்ததாக மயங்கினோமா.....சொல்வாயாக...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக