வெள்ளி, 17 ஏப்ரல், 2026

தமிழமுது –267– தொல்தமிழர் இசை மரபு:127...பண்சுமந்த பாடல்கள்.,திருநாவுக்கரசர்.

 தமிழமுது –267– தொல்தமிழர் இசை மரபு:127. நீட்சியும் -  வீழ்ச்சியும்ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

இசைமரபு - எழுச்சி 

பக்தி இலக்கியங்கள்பண்சுமந்த பாடல்கள். 

        திருநாவுக்கரசர். 

திருநாவுக்கரசர்பரதகண்டமெங்கணும் பரந்து நிலவிய தொன்மைச் சமயமும் உண்மைத் திருநெறியுமாகிய சைவ சமயத்திற்குப் புறச்சமயங்களால் உண்டாகிய இடையூறுகளைக் களைந்துஅதன் மாண்பு மலை விளக்காய்த் திகழுமாறு செய்த பேரருளாளப 

 பெருமக்களாம் மயக்குரவர் நால்வருள ஒருவராவார்இவர் பசுகரணமெல்லாம் பதிகரணமாகத் திகழப்பெறும் சீவன் முத்தி நிலையை எய்தியவரென்பது   

பாலை நெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்   

காலனையன் றேவிக் கராங் கொண்ட பாலன்   

மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கும் நந்தம்   

்கரணம்போல் அல்லாமை காண்.” (திருக்களிற்றுப்பாடியார்.)  

முதல் ஈண்டு “உலகு” என்ற சொல் என்னும்  ஆன்றோர் திருவாக்கினால் அறியப்படும்இவரது மெய் வரலாறு தில்லை அம்பலவாணர் அருளிய முதல்கொண்டு சேக்கிழார் பெருமான் பாடிய திருத்தொண்டர் புராணத்துள்ளே திகழ நிற்பது. சிவபெருமான் அருள் தலைக்கூடாமையால் உண்மைச்சமயம் இதுவென அறியப்பெறாது மண சமயத்திற் புகுந்து பாடலிபுத்திரம் என்னுமிடத்தை அடைந்து நூலாராய்ச்சியில் மேம்பட்டவராய் புத்த சமயத்தவரை வாதில் வென்று தருமசேனர் என்னும் பெயருடன் இருந்து வந்தார்.  

ிருவாமூரில் இருந்த திலகவதியார் திருவதிகை வீரட்டானத்தை அடைந்து வீரட்டானேசுடருக்குத் திருவலகிடுதல்திருமெழுக்கிடுதல்திருப்பள்ளித் தாமம் தொடுத்துச் சாத்துதல் முதலிய திருப்பணிகளைச் செய்துவரும் நாளில் தமது தம்பியார் (மருணீக்கியார்சமணசமயப் படுகுழியில் வீழ்ந்து கெடுவதை இறைவனிடத்தில் விண்ணப்பித்துவரஅதனை ஏற்ற சிவபெருமான் அவருக்குக் கனவிலே தோன்றி,”நின் தம்பி முற்பிறப்பிலே ஓர் முனிவனாகி நம்மையடையத் தவம் புரிந்தவன்சிறிது தம் இயற்றி இந்நிலையனாயினான் ; நாம் இனி அவனைச் சூலைமடுத்து ஆட்கொள்வோம் ; கவலை ஒழிக .”என்று அருள் புரிந்தார். 

தருமசேனருக்குச் சூலை நேரம் வந்துற்றதுசமணர் பலவகையான தீவினைச் செய்யவும் அது தீராது மேன்மேல் முறுகி வருத்தவேஉய்யுங்காலம் வந்தமையால் தமது தமக்கையை வேண்டி திருவதிகையை அடைந்து அவரை வணங்கஅவர் பரமசிவனது அருளை  வியந்து அவருக்குத் திருநீற்றைத் திருவைத்துத் எழுந்தோதக்  கொடுத்துதிருப்பள்ளி எழுச்சியிலே திருக்கோயிலுக்கு அழைத்துச்சென்று இறைவன்பால் ஆட்படுத்தினார் 

ஆட்பட்ட மருள் நீக்கியாரும் இறைவனை வலம்வந்து பணிந்து திருமுன்னின்று  திருவருளினாலே பாடும் வன்மைப்பெற்றுத் தமது சூலை நீங்குமாறும் லகினர் உய்யுமாறும் “கூற்றாயினவாறு விலக்கலீர்’ என்னும் திருப்பதிகம் பாடி நோய் நீங்கிப் பேரின்பம் அடைந்துதமக்கு மிகப் பெரிதாய உதவியைச் செய்ததென்று சூலையைப் பாராட்டினார்அப்பொழுது றைவர் அவருக்கு நாவுக்கரசு என்னும் பெயரினைச் சூட்டி அருளினார்...........................தொடரும்.........................................................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக