வெள்ளி, 17 ஏப்ரல், 2015

சங்க இலக்கியச் செய்திகள்

இயற்கையும் செயற்கையும்
மாரி பொய்ப்பினும்  வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்  இக் கண்ணகன் ஞாலம்
                              வெள்ளைக்குடி நாகனார், புறம்.35: 27-29
 மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் இயல்பு அல்லாதன மக்களது தொழிலிலே தோன்றினாலும்  காவலரைப் பழிக்கும் இவ்விடமன்ற உலகம்.
என்னே சங்கப் புலவரின் தொலை நோக்குச் சிந்தனைஇயற்கை அல்லன செயற்கையால் தோன்றுமாம் அதாவது மக்கள் தொழிலால் தோன்றுமாம். காடழித்தல்,மணல் கொள்ளையடித்தல், நெகிழ்வி பயன்படுத்தல், காற்றை மாசூட்டுதல் போன்ற கொடுமைகளை மக்கள் செய்கின்றனரே இதைதான் செயற்கையால் இயற்கையை அழித்தல் என்று புலவர் கூறினார் என்று கொள்க.காவலர் யாவர்?  - அன்று- மன்னன், இன்று- ஆள்வோர்.
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக