புதன், 22 ஏப்ரல், 2015

Tamil New Year

கார்த்திகைவிழா
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம்காட்டு
இலைஇல மலர்ந்த முகைஇல் இலவம்
கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி
                                                  ஒளவையார், அகநா. 11: 1-5
 ஞாயிற்று மண்டிலம் நெருப்பைப் போல் சிவந்து சுட்டெரிக்கும் வெப்பம் – காடு – இலை இல்லை- அரும்பு இல்லை – ஒருங்கே மலர்ந்த இலவம் பூக்கள் – மகிழ்ச்சி- மகளிர் கூட்டம் – சேர்ந்துஎடுத்த – கார்த்திகை விளக்கின் நெடிய வரிசை போல – பொலிவுடன் தோன்றும்.கார்த்திகை விழா தொன்றுதொட்டுக் கொண்டாடப் படுவதை அகம்.141, 185 காண்க.
புத்தாண்டு
நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விள்க்கில்  தகை உடையவாகி
                                                      மதுரைக் கண்ணங்கூத்தனார், கார்.நா. 26

தலைநாள்- திருவிழாவின் முதல் நாளாகிய கார்த்திகை, நலமிகு கார்த்திகை என்பதனை அத்திங்களில் சிறந்த நாளாகிய கார்த்திகை எனக் கொள்ளலும் ஆம், முன்பு நாட்கள் கார்த்திகை முதலாக எண்ணப்பட்டனவாகலின் தலைநாள் என்றார் எனலுமாம்.                         ந.மு.வே. நாட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக