ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

தமிழிசை

பண் இசைக்கும் நேரம்
மாலை மருதம் பண்ணி காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி
வரவு எமர் மறந்தனர் ...
                                   வன்பரணர், புறநா. 149 : 2 – 4
மாலைப் பொழுதில் மருதப் பண்ணை இசைத்தும் காலைப் பொழுதில் செவ்வழிப் பண்ணை இசைத்தும்   முறைமாற்றிஇசைத்தனர் எம் பாணர்.
காலையில்மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப் பண்ணும் இசைத்தல் இசை நூல்முறை. (மேலும் காண்க: 135 )
ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்று எழுந்து
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
நெடுங்கடை நின்று பகடு பல வாழ்த்தி
                             மாறோக்கத்து நப்பசலையார், புறநா. 383 : 1 -4
ஒள்ளிய பொறிகளை உடைய சேவல் எழுப்பத் துயில் உணர்ந்து எழுந்து குளிர்ந்த பனிதுளிக்கும் புலராத விடியற்காலத்தே, நுண்ணிய கோல் கொண்டு தடாரிப் பறையை முழங்க அடித்து, நெடிய வாயிற்கடை நின்று, பலவாகிய உழவு எருதுகளை வாழ்த்தி…
வெள்ளி தோன்ற புள்ளுக்குரல் இயம்ப
புலரி விடியல் பகடுபல வாழ்த்தி
தன்கடைத் தோன்றினும் இலனே பிறன்கடை
அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
                                           கல்லாடனார், புறநா.385 : 1- 4
வெள்ளியாகிய விண்மீன் வானத்தே தோன்றவும் புள்ளினங்கள் எழுந்து ஒலிக்கவும் இரவு புலரும் விடியற்காலத்தே எருதுகளாகிய செல்வத்தை வாழ்த்தி, யான் அவின் பெருமனை  வாயிலிடத்துச் சென்றிலேன்; பிறன்மனை வாயிலிடத்து நின்று கொட்டிய அகன்ற கண்ணை உடைய தடாரிப் பறையினது ஓசையைக் கேட்டு அருள் கூர்ந்து..
தமிழிசை வரலாறு அறிய ஆய்க
முதன்மை நோக்கு : வரலாற்றியல் அணுகுமுறை
 தமிழிசை வரலாறு அறிய ஆய்க

முதன்மை நோக்கு : வரலாற்றியல் அணுகுமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக