திங்கள், 13 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 14

மலைபடுகடாம் – அரிய செய்தி : 14
மருத்துவம் – பாட்டு
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்
       பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 302 – 304
தம் கணவர் மார்பில் புலி பாய்ந்தமையால் பட்ட நெடிய, பிளந்து காணப்படும் சீரிய புண்ணை ஆற்றுவதற்குக் காவலெனக் கருதி, அறல் போன்ற, கூந்தலையுடைய கொடிச்சியர் பாடும் பட்டால் எழும் ஓசையும் .
( கொடுவரி – புலு (ஆகுபெயர்) ; வசி – பிளவு .)

1 கருத்து: