செவ்வாய், 7 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 8

மலைபடுகடாம் – அரிய செய்தி : 8
கானவர் –  காவு மரம்
தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர்
சிறுகண் பன்றிப் பழுதுளி போக்கி
பொருது தொலை யானைக் கோடு சீர் ஆக
தூவொடு மலிந்த காய கானவர்
                   பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.152 – 155
கானவர் தம்முள் பொருதுபட்ட யானையின் கொம்புகளைக் காவு மரமாகக் ( காவடியின் தண்டு போல்) கொண்டு தாம் கொண்டுவந்த தேன், கிழங்கு, ஊன், பன்றியின் தசை, போன்றவற்றைப்  பனை ஓலையால் செய்யப்பட்ட வட்டில்களில் இட்டு,  அக் காவு மரத்தில் தொங்கவிட்டுச் சுமந்து வருவர்.
( வட்டி – பனையோலைப் பெட்டி ;  தூ – உணவு / தசை ;  பதம் – உணவு ; காய கானவர் – காவடியாகச் சுமந்து வந்த கானவர்.) 

1 கருத்து: