ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 783

திருக்குறள்- சிறப்புரை : 783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. --- ௭௮௩
படிக்குந்தோறும் இன்பம் நல்கும் நூலைப்  (திருக்குறள்) போலப் பண்புடையாளர் நட்பு பழகுந்தோறும் இன்பம் பயக்கும்.
“குன்றிய சீர்மையர் ஆயினும் சீர் பெறுவர்
குன்று அன்னார் கேண்மை கொளின்.” –நாலடியார்.

பெருமை இல்லாதவர்கள், புகழில் மலைபோல் உயர்ந்து நிற்கும் சான்றோர்களின் நட்பைக் கொள்வார்களானால் அவர்களும் பெருமை பெற்று விளங்குவார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக