வியாழன், 8 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 787

திருக்குறள்- சிறப்புரை : 787
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. – ௭௮௭
(அழிவினவை – அழிவின் அவை ; ஆறுய்த்து – ஆறு உய்த்து.)
அழிவைத்தரும் தீயவழிகளில் செல்லாது தடுத்து., நல்வழிப்படுத்தித் தவிர்க்க இயலாத துன்பம் வந்துற்றபோது அத்துன்பத்தில் தாமும் பங்கு கொள்வதே சிறந்த நட்பாகும்.
”துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்.” –புறநானூறு.
எம் தலைவன் நாஞ்சில் வள்ளுவன், வலிமை கொண்டு போர் செய்யவரும் பகைவர்களுக்கு நினைவுக்கு எட்டாத தொலைவில் இருப்பான் ; நட்புக்கொண்டு அன்பால் அடைந்தவர்க்கு அவரது உள்ளங்கை போல் நெருங்கி இருப்பான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக