திங்கள், 19 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :798

திருக்குறள் -சிறப்புரை :798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. – ௭௯௮
 சிறுமையான செயல்களைச் சிந்திக்காத உள்ளம் வேண்டும் ; அதுபோல தனக்கு ஒரு துன்பம் வந்துற்றபோது தன்னைக் கைவிட்டுச் செல்வாரது நட்பினைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
 சிறியன சிந்தியாத மனம் வேண்டும் ; நட்டாற்றில் கைவிடுபவன் நட்பு வேண்டாம்.
“உப்பின் பெருங் குப்பை நீர்படின் இல்லாகும்
நட்பின் கொழு முளை பொய் வழங்கின் இல்லாகும்.” –திரிகடுகம்.
உப்புக் குவியலில் நீர் புகுந்தால் ஒன்றும் இல்லாமல் போகும் ; வளர்ந்து வரும் நட்பாகிய மொட்டில் பொய்யாகிய நெருப்பைப் பெய்தால் நட்பு அழிந்து போகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக