செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :792

திருக்குறள் -சிறப்புரை :792
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்.--- ௭௯௨
பலவாறும் ஆராய்ந்து தேர்ந்துகொள்ளாதவன் கொண்ட நட்பு, சாகுவரை துன்பம் தரும்.
“ நில்லாத காட்சி நிறையில் மனிதரை
புல்லா விடுதல் இனிது.” –இனியவைநாற்பது.

தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக