வியாழன், 15 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :794

திருக்குறள் -சிறப்புரை :794
குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.--- ௭௯௪
(தன்கட்- தன்கண்)
 நல்ல குடியில் பிறந்து, தன்மீது விழும் பழிக்கு அஞ்சி ஒடுங்கும் தன்மைஉடைய ஒருவனை, என்ன விலை கொடுத்தாயினும் நட்பாக்கிக் கொள்ளல் வேண்டும்.
“…. …… …. சான்றோர்
புகழும் முன்னர் நாணுப
பழியாங்கு ஒல்பவோ காணுங்காலே.”----குறுந்தொகை.
சான்றோர், தம்மை யார் புகழ்ந்தாலும் நாணுவர், அத்தகையோர் பழி ஏற்க நேர்ந்தால் எவ்வாறு தாங்குவர்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக