திங்கள், 4 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :896


திருக்குறள் -சிறப்புரை :896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். ---- ௮௯௬
தீயால் சுடப்படினும் ஒருவேளை உயிர் பிழைத்தல் கூடும் ஆனால் நல்லொழுக்கமுள்ள பெரியோர்களுக்குத் தீமை செய்பவர்கள் ஒருகாலும் உயிர் பிழைத்தல் முடியாததாகும்.
” இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்
உம்மையே ஆம் என்பார் ஓரார்…” – திணைமாலை நூற்றைம்பது.
ஒருவன், இப்பிறப்பின்கண் செய்த தீவினை இப்பிறப்பிலேயே அவனை அடைந்து வினைப்பயன் கொடுக்கும் ; இதனை நன்கு ஆராயாத அறிவிலிகளே மறுபிறப்பில்தான் அத்தீவினைப் பயன் கொடுக்கும் என்று கூறுவார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக