திங்கள், 18 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :910


திருக்குறள் -சிறப்புரை :910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.--- ௯௧0
சிந்தனைத் தெளிவும் செயல் திறனும் உடையார்க்கு, எக்காலத்தும் பெண்ஏவல் வழிநின்று நடக்கவேண்டிய அறியாமை இருப்பதில்லை.
“ இரை சுடும் இன்புறா யாக்கையுள் பட்டால்
 உரை சுடும் ஒண்மை இலாரை…” –நான்மணிக்கடிகை.
நோயுள்ள உடம்பில் சேரும் உணவு செரிக்காமல் துன்புறுத்தும் ; அறிவு இல்லாதவரை அவர்தம் வாய்மொழியே துன்புறுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக