புதன், 6 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :898


திருக்குறள் -சிறப்புரை :898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. ------ ௮௯௮
நல்லொழுக்கத்தால் மலைபோல் உயர்ந்த சான்றோர்கள், தம்மை இகழ்வாரை அழிக்க நினைத்துவிட்டால் . உலகில் வளம்பல பெற்று, நிலைத்து நிற்பாராயினும் அவர்கள் கூடக் கெட்டு  அழிந்துபடுவார்கள்.
“கல்வியான் ஆய கழி நுட்பம் கல்லார்முன்
சொல்லிய நல்லவும் தீய ஆம்…” –பழமொழி.
கற்றறிந்த சான்றோர், கல்லாதாரிடத்துச் சொல்லிய நல்லனவும் தீயனவாம்.

1 கருத்து: