செவ்வாய், 5 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :897


திருக்குறள் -சிறப்புரை :897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.---- ௮௯௭
அறிவிற்சிறந்த நல்லொழுக்கமுடைய சான்றோர்,      தீயோரைச் சினந்து நோக்கின் ,  எல்லாவகையானும் சிறப்புடைய வாழ்க்கையும் அளவற்ற செல்வமும்    அவர் பெற்றிருந்தாலும் அவற்றால் யாதொரு பயனும் இல்லையாம்.
“ ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவர் புல்லறிவினார்…” ---நாலடியார்.
அறிவற்றவர்கள் செல்வத்திலே மயங்கித் தம் வாழ்நாளை வீணே கழிப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக