வெள்ளி, 15 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :907


திருக்குறள் -சிறப்புரை :907
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. ---- ௯0௭
( பெண் ஏவல் )
பெண்டிர் இடும் கட்டளைக்கு இணங்கிச் செயல்படும் (இழிந்த) ஆண்மையைவிட நாணத்தை நற்குணமாகக் கொண்ட பெண்மையே பெருமை உடையது.
“ மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு.” ---கலித்தொகை.
மெல்லியல்புகள் மிக்க ஆயமகளே..! தயிர்க் குடத்தின் மத்தைச் சுற்றிய கயிறுபோல், நின் அழகைச் சூழ்ந்து சுற்றுகின்றது என் நெஞ்சு.---தலைவன்.

1 கருத்து: