புதன், 23 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1115


திருக்குறள் -சிறப்புரை :1115

அனிச்சப்பூக்  கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. --- ௧௧௧

மிகவும் மென்மையான அனிச்சப்பூக்களின் காம்புகளை நீக்காமல், இவள் தலையில் சூடிக்கொள்வாளானால், அவளின் மெல்லிய இடை தாங்காது ;  அதனால் நல்ல பறைகள்  ஒலிக்கா…!
( சாப்பறைதான் ஒலிக்கும்,)

இகல் வேந்தன் சேனை இறுத்த வாய்போல
அகல் அல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி
நுதல் அடி நுசப்பு என மூவழிச் சிறுகி
கவலையால் காமனும் படைவிடு வனப்பினோடு.” ---கலித்தொகை.

இகலிடத்தே வேந்தனின் சேனை, உயிரோடு போம்படி படை தொடுமாறு போல, அகன்ற அல்குல், தோள், கண் என மூன்றிடமும்  பெருத்து ; நெற்றி, அடி, இடை, என மூன்றிடமும்  சிறுத்து , மன்மதனும் தனக்குத் தொழில் இல்லை எனக் கவலையால் தன் படைக்கலன்களைக் கைவிடுதற்குக் காரணமான அழகோடு வந்தனளே…!

1 கருத்து: