வியாழன், 31 ஜனவரி, 2019


திருக்குறள் -சிறப்புரை :1123

கருமணியிற் பாவாய்நீ போதாய் யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம். ----- ௧௧ ௨௩

என் கண்ணின் கருமணியில் உறைந்திருக்கும் பாவையே…! நீ அவ்விடத்தைவிட்டு அகன்றுவிடு ;யாம் விரும்பும் அழகிய நெற்றியை உடைய  எம் காதலி  இருக்க வேறு இடமில்லை.

துறைநணி யிருந்த பாக்கமும் முறைநனி
இனிதுமன் அளிதோ தானே துனிதீர்ந்து
அகன்ற அல்குல் ஐதமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகள்
மானமர் நோக்கங் காணா ஊங்கே.” -----நற்றிணை.

அகன்ற அல்குலையும் மெல்லியதாய் அமைந்த இடையையும் உடைய மீன்பிடிக்கின்ற பரதவரின் இளமகளின், மான்போலும் ஒன்றோடொன்று தொழிலின் மாறுபட்ட பார்வையைக் காணப் பெறாதமுன்…..  துறைக்கு அணித்தாயிருந்த பாக்கம் மிகவும் இனிமை உடையதாயிருந்தது ;  ஆனால் இன்று, பரதவர் மகளின் நோக்கம் காணப்பெற்றமையால் , பாக்கம் அழகிழந்ததாயிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக