வியாழன், 24 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1116


திருக்குறள் -சிறப்புரை :1116

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன். ------ ௧௧௧

விண்மீன்கள், நிலவுக்கும் நிலவைப்போல் ளிவிடும் என் காதலியின் முகத்திற்கும் வேறுபாடு அறியாது கலங்கித் திரிகின்றன.

நுதலும் முகனும் தோளும் கண்ணும்
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ
ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று
மைதீர்ந்தன்று மதியும் அன்று.” ----கலித்தொகை.

தலைவன் என் அருகே வந்து, நுதலையும் முகத்தையும் தோளையும் கண்ணையும் சாயலையும் சொல்லையும் நோக்கி….. நின் நுதல் கண்டார் வியக்குமாறு தேய்ந்தது ஆயினும் பிறையும் அன்று ; நின் முகம் மறுவற்றுலது ஆயினும் மதியும் அன்று என்று மேலும் பலவாறு பாராட்டிக் கூறினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக