வெள்ளி, 25 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1117


திருக்குறள் -சிறப்புரை :1117

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. ------ ௧௧௧

நிலவானது தேய்ந்தும் பின்னர் நிறைந்தும் ஒளிவிடும் காலத்து மறுவுடன் தோன்றுவதைப்போல , இப்பெண்ணின் முகத்தில் களங்கம்  (மறு) உண்டோ…? இல்லையே…!

ஐ வாய் அரவின் இடைப்பட்டு நைவாரா
மையில் மதியின் விளங்கு முகத்தாரை
வெளவிக் கொளலும் அறன் எனக் கண்டன்று.” ---கலித்தொகை.

ஐந்து வாயினை உடைய பாம்பினது பார்வையிலே அகப்பட்டு வருத்தம் வந்து என்ன செய்வது என்று அறியாது நின்றேன் ; இனி யாது  செய்வேன் என நெஞ்சொடு சினந்து நின்றனன் ; மாசற்ற முழு மதிபோல விளங்கும் முகத்தினை உடைய மகளிரை வலிதிற் பற்றிப் புணர்தலும் அறத்தொடுபட்டது என மணநூல் கண்டது எனத் துணிந்து கூறினன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக