ஞாயிறு, 16 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1324


திருக்குறள் -சிறப்புரை :1324

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.------ ௩உ ௪

காதலரை விடாது தழுவிப் புணர்ந்து மகிழ்தகற்கு இடந்தராத புலவியால் படும் துன்பத்தினைப் போக்குதற்கு, உள்ளத்தை உடைத்து  எழும் பணிமொழி என்னும் படை ,ஊடலை முறியடிக்கும்.

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ
புனக்கிளி கடியும் பூங்கண் பேதை
தான் அறிந்தன்றோ இலளேபாணாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பின்னும் தன் உழையதுவே.” ---குறுந்தொகை.

நள்ளிருளில் துயில் கொள்ளும் யானையைப்போலப் பெருமூச்சுவிட்டு என் உள்ளம் புணர்தற்கு முன்னரேயன்றிப் புணர்ந்த பின்னரும் தன்னிடம் இருப்பதை, சுனையில் மலர்ந்த பூக்களைப் பறித்து, அவற்றை மாலையாகக் கட்டி, தினைப்புனத்தில் கதிரை உண்ணவரும் கிளிகளை ஓட்டுகின்ற பூப்போன்ற கண்களையுடைய பேதையாகிய தலைவி, அறிந்தனளோ..அறிந்திலளோ…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக